Short news

பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்

9வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். ஆனால், நாளை நடைபெற உள்ள இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஆளும் மாநில முதல்வர்களும் புறக்கணித்துள்ளனர்.

x