Short news

‘‘கொடூர குற்ற விசாரணை மையங்களில் கேமரா’’ - ஐகோர்ட்

‘மதுரை மாவட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களை கொடூர குற்ற விசாரணைப் பிரிவில் வைத்து அடித்து சித்திரவதை செய்து மனித உரிமை மீறலும் நடைபெற்று வருகிறது. எனவே கொடூர குற்றப்பிரிவு விசாரணை மையத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்” என வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வாதாடினார். இதையடுத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

x