கம்பைநல்லூர் அடுத்த நவலைகிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் ஒரு பாத்திரத்தில் மாட்டு இறைச்சியை எடுத்துகொண்டு பேருந்தில் சென்றுள்ளார். மாட்டு இறைச்சியை காரணம் காட்டி, பேருந்தில் இருந்து இவரை நடுவழியில் நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.