Published : 25 May 2016 11:15 AM
Last Updated : 25 May 2016 11:15 AM
மியான்மரின் கச்சின் மாகாணத் தில் உள்ள பாகன்ட் என்ற நகரில் மரகத கல் சுரங்கம் இயங்கி வருகிறது.
அங்கு பெய்த கனமழை காரண மாக திங்கள்கிழமை இரவு சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 30 பேரின் கதி என்னவானது என தெரியவில்லை. சுரங்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் பணியாற் றியதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
சுரங்கத்தின் அருகே இருந்த குடியிருப்பு பகுதி களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கும் மீட்புபணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT