Published : 01 Aug 2020 07:27 PM
Last Updated : 01 Aug 2020 07:27 PM
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் உள்ள 83 மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,45,443 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கரோனாவுக்கு இதுவரை 14,058 பேர் பலியாகி உள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் மொத்தமாக 1. 7 கோடி பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,06,059 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,56,772 ஆகவும் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 24 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment