Last Updated : 25 Nov, 2014 05:01 PM

 

Published : 25 Nov 2014 05:01 PM
Last Updated : 25 Nov 2014 05:01 PM

சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் சத்தமாக இசை கேட்ட சிறுமி தனது உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மதன் கல்லான் கிராமத்தில் ரேஹானா பிபி (16) என்ற சிறுமி திங்கள்கிழமைதனது வீட்டில் இசை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் அதிகமாக இருந்ததை அடுத்து வீட்டுக்குள் வந்த சிறுமியின் மாமா, சத்தத்தை குறைக்கும்படி கூறினார்.

இருப்பினும் சிறுமி அவரது பேச்சைக் கேட்டு சத்தத்தை குறைக்காத நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுமியை நோக்கி அவர் சுட்டார்.

இதனை அடுத்து அங்கு வந்த சிறுமியின் தந்தை தனது மகள் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸிடம் சிறுமியின் தந்தை தகவல் அளித்த நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்டவர் தப்பியோடியது தெரியவந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நபரை பாகிஸ்தான் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x