Last Updated : 30 Nov, 2014 01:15 PM

 

Published : 30 Nov 2014 01:15 PM
Last Updated : 30 Nov 2014 01:15 PM

கொலை வழக்கில் இருந்து முபாரக் விடுவிப்பு

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (86) மீதான கொலை குற்றச் சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

ஊழல் வழக்கில் இருந்தும் அவரை விடுவித்த நீதிமன்றம், மற்றொரு ஊழல் வழக்கில் அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

முபாரக்கின் மகன்கள் அலா, கமல் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியின்போது 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தக் கிளர்ச்சி மூலம் முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

கிளர்ச்சியாளர்களை கொல்ல உத்தரவிட்டதாக முபாரக் மற்றும் அவரது சகாக்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x