Last Updated : 17 Nov, 2014 12:31 PM

 

Published : 17 Nov 2014 12:31 PM
Last Updated : 17 Nov 2014 12:31 PM

சீன உணவு தொழிற்சாலையில் விபத்து: 18 பேர் பலி

சீனாவில் கேரட்டுகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சீனாவின் கிழக்கு ஷடாங் மாகாணத்தில் கேரட்டுகளை சேகரித்து தரம் பிரிக்கும் தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிலையில் ஞாயிறு இரவு 7 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு தீயை அணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலுல் விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்

மேலும் மீட்கப்பட்ட 13 பேர் பலத்த தீ காயங்களூடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் மேலாளரை கைது செய்து சீன போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x