Published : 07 Nov 2014 10:30 AM
Last Updated : 07 Nov 2014 10:30 AM
தனது ட்விட்டர் கணக்கு மூலம் வாகா எல்லையில் நடந்த தாக்குதலுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த மிரட்டலுக்கும் பொறுப்பேற்ற பாகிஸ்தான் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதி நேற்று ட்விட்டரில் இருந்து காணாமல் போயுள்ளான்.
அந்தத் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளரான இஹ்சானுல்லா இஹ்சான் தன் ட்விட்டர் கணக்கு மூலம் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்திருந்தான். நேற்று அந்த ட்விட்டர் கணக்கை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தேடியபோது அந்தக் கணக்கு ட்விட்டரில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டிருந்தது தெரியவந்தது.
மத்திய பாதுகாப்பு முகமையிடமிருந்து பெற்ற தகவல்களைக் கருத்தில் கொண்டு ட்விட்டர் நிறுவனம் அந்தத் தீவிரவாதியின் கணக்கை மூடியது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரஹீல் குர்ஷீத்திடம் கேட்டதற்கு, 'தனி நபர்களின் ட்விட்டர் கணக்குகள் பற்றி கருத்து கூற முடியாது' என்று கூறிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT