Published : 18 Nov 2014 09:19 AM
Last Updated : 18 Nov 2014 09:19 AM
நியூஸிலாந்தின் கிழக்குப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நார்த் தீவில் இருந்து கடலுக்குள் 200 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அலகில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்த் தீவு பகுதியில் உள்ள பழைய கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT