Published : 02 Jun 2016 09:54 AM
Last Updated : 02 Jun 2016 09:54 AM
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பலுஜா நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட சிறுவர்கள் சிக்கி உள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிதிப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சிறுவர்கள் நிதிப் பிரிவின் இராக் பிரதிநிதி பீட்டர் ஹாக்கின்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
இராக்கின் பலுஜா நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக இராக் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால், ராணு வத்தில் ஆட்கள் பற்றாக்குறை யால் அந்த நகரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், பலுஜா நகரில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிக்கி உள்ளதாக யுனிசெப் கணக் கிட்டுள்ளது.
பலுஜா நகரில் இருந்து நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பத்தினர் எப்படியோ தப்பி உள்ளனர். அவர்கள் நகருக்கு வெளியில் முகாமில் தங்கி உள்ளனர். பலுஜா நகரில் உணவு, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுவர்களை தீவிரவாத இயக்கத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக சேர்த்து வருகின்றனர். அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. பலுஜா நகரில் உள்ள பொதுமக்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று யுனிசெப் வலியுறுத்தி உள்ளது.இவ்வாறு பீட்டர் ஹாக்கின்ஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT