Published : 26 Nov 2014 11:34 AM
Last Updated : 26 Nov 2014 11:34 AM

அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது மனித உரிமைகள்: சார்க் மாநாட்டில் ராஜபக்ச பேச்சு

மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயம். ஆனால் அது சிலரால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய ராஜபக்ச, "மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயம். ஆனால் அது சிலரால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

பிற நாடுகளின் உள்விவகாரத்தில், சுதந்திரத்தில் தலையிட மனித உரிமை அத்துமீறல் குற்றச்சாட்டு ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதம் பிராந்தியங்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x