Published : 27 Mar 2014 10:56 AM
Last Updated : 27 Mar 2014 10:56 AM

மகன்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் முர்தோக்

சர்வதேச ஊடகத் துறையின் மன்னனாக திகழும் ரூபர்ட் முர்தோக் தனது நிறுவனத்தின் இணை தலைமைப் பொறுப்பை மகன்களிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவில் ஸ்டார் ஊடக குழுமம் உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கொண்டுள்ள நியூஸ் கார்ப் மற்றும் டுவென்டி பர்ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் முர்தோக்.

இவர் தனது ஊடக சாம்ராஜ்ஜியத்தில் மேற்கொண்டுள்ள அதிகார மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நியூஸ் கார்ப் மற்றும் டுவென்டி பர்ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் இணை தலைவராக லாக்லன் செயல்படுவார். இளைய மகன் ஜேம்ஸ் முர்தோக், டுவென்டி பர்ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல்அதிகாரியாக செயல்படு வார் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x