Published : 01 Feb 2025 07:00 AM
Last Updated : 01 Feb 2025 07:00 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் கூறியதாவது: அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது.
இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்
ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment