Published : 09 Aug 2024 05:16 AM
Last Updated : 09 Aug 2024 05:16 AM

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த புதன்கிழமை மதியம் 1:54 மணிக்கு நேபாள தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர்டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் சியாபுருபென்ஸி நகருக்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட அடுத்த 3 நிமிடத்தில் கட்டுப் பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் காத்மாண்டு நகரின் வடமேற்கு பகுதியில் உள்ளசூர்யாசவுர் எனும் மலைக்காட்டில் ஹெலிகாப்டர் நொறுங்கிவிழுந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் ராணுவ மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், 4 பயணிகளும்,விமானியும் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சவுர்யா விமானம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த 18பயணிகளும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x