Published : 02 Sep 2023 05:02 AM
Last Updated : 02 Sep 2023 05:02 AM

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் - நாசா ஆர்பிட்டர் படம் பிடித்தது

வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது போல், ரஷ்யா லூனா -25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்தரையிறங்குவதற்கு முன்பாக, லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்காஸ்மாஸ் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதைகளை அதிவேகமாககடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழைக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழேவிழுந்து நொறுங்கியது.

இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை, நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x