Published : 20 Feb 2023 06:10 AM
Last Updated : 20 Feb 2023 06:10 AM
சமுதாயம் நம் தேவைகளுக்காக பள்ளிக்கூடங்களை உருவாக்கி ஆசிரியர்களையும் நியமித்தது. அங்கு மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்தந்த காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் தீட்டப்பட்டு போதிக்கப்பட்டது. மொழியையும், கணிதம் அறிவியல், சமூக அறிவியலையும் போதித்ததோடு நன்னெறி கல்வியும் விளையாட்டும் கற்பிக்கப்பட்டது. அன்று நன்னெறி கல்வியில் போதிக்கப்பட்ட கதைகள் வெறும் கதைகளாக இல்லை. மாணவர்களின் வாழ்க்கை பாதைகளை தீர்மானிக்கும் விதியின் விதைகளாக இருந்தன. மொழியும் பாடங்களும், பணியும் ஊதியமும் கொடுத்தது. பெற்ற செல்வத்தைக் கொண்டு வளமான, மகிழ்வான வாழ்வை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் பாதை போட்டு தந்தவை நன்னெறி கல்வியும், குடும்பப் பாரம்பரியமும் சமூகச் சூழலுமே. அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், எந்திரங்களின் ஆதிக்கம், ஊடகங்களின் உபயோகம்உலகப் பொருளாதாரம், தாராளமயமாக்கல் என உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் மனித வாழ்க்கையை புரட்டிப்போடத் தொடங்கியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment