Published : 10 Nov 2022 06:12 AM
Last Updated : 10 Nov 2022 06:12 AM

ப்ரீமியம்
வெற்றி நூலகம்: தன்னம்பிக்கை விதைக்கும் ஓரிகாமி கலை

ம. பரிமளா தேவி

ஜப்பானிய மொழியில் ஓரி என்றால் மடிப்பு, காமி என்றால் காகிதம் என்றும் பொருள். காகிதங்களைப் பயன்படுத்தி உருவங்கள் செய்யும் கலை ஓரிகாமி. ஒரு சதுரமான அல்லது செவ்வகமான காகிதத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், பசை கொண்டு ஒட்டாமல் கயிறு கொண்டு கட்டாமல் ஒரு வடிவமாக உருவாக்குவதே ஒரிகாமியின் தனிச்சிறப்பு. அதனால் தான் இதைக் காகித மடிப்புக் கலை என்று அழைக்கின்றோம். அத்தகைய ஓரிகாமி குறித்து தியாக சேகர் எழுதியிருக்கும் ‘ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை’ புத்தகம் ஓங்கில் கூட்டம் வெளியீடாக வந்துள்ளது.

காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அது மிகவும் மதிப்புமிக்கதாகவும் விலை உயர்ந்த பொருளாகவும் இருந்தது. சாமானிய மக்களுக்கு எட்டாத பொருளாகவே இருந்துள்ளது. காகிதத்தைப் புத்த மடாலயங்கள் மற்றும் பெரும் வசதி படைத்தவர்களின் வீடுகளில் நடைபெறும் விழாக்களின் போது அலங்கரிக்க மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x