Published : 20 Oct 2022 06:00 AM
Last Updated : 20 Oct 2022 06:00 AM

ப்ரீமியம்
ஆழ்மனதின் அற்புத சக்தி 

காமாட்சி ஷியாம் சுந்தர்

உயர்வான எண்ணங்கள் நமது வாழ்க்கையை மென்மேலும் உயர்த்திடும். நவீன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ப்ராய்ட் கோட்பாட்டின்படி ஆழ்மனதிற்கு அதிக ஆற்றல் உண்டு. ஆழ்மனதில் ஏற்படும் நமது எண்ண அலைகளின் தாக்கத்தின் விளைவே நமது இன்றைய வாழ்க்கை. ஆழ்மனதின் எண்ணங்களின் அலைகள் பிரபஞ்ச எல்லைக்கு அனுப்பப்பட்டு அவை மீண்டும் நமது வாழ்வில் பிரதிபலிக்கின்றன. ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள் நமது தூக்கத்தில் கனவுகளாக வெளிப்படுகின்றன.

நமது வாழ்வில் ஈடேறாத ஆசைகளோ, எதிர்காலம் பற்றிய அச்சமோ, கடந்தகால நிகழ்வுகளின் பதிவுகளோ கனவுகளாக வெளிப்படுகின்றன. ஆழ்மனம் என்பது எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். நமது உடலின் உள்ளுறுப்புகள் ஆன இதயம், நுரையீரல், ரத்த ஓட்ட மண்டலம், செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் ஆழ்மனதின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மூளையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. நமது மூளையின் 95 சதவீத செயல்பாடுகள் ஆழ் மனதின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x