Published : 07 Feb 2023 06:20 AM
Last Updated : 07 Feb 2023 06:20 AM
ஒரு போர் நடந்தால், ஒரு நாடு பிரிந்து மக்கள் அகதிகள் ஆனால், ஒரு கொள்ளை நோய் ஊரெங்கும் பரவினால் என்ன நடக்கும், எத்தனை உயிர்கள் போகும், என்பதைப் பற்றி நாம் எத்தனையோ வரலாறுகள் படித்திருப்போம். ஆனால், எப்போதோ நடந்த இந்த நிகழ்வுகளால் இன்றுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மையில் நடந்தது.
1971-ம் ஆண்டு நிகழ்ந்த வங்கதேச போர் மற்றும் பிரிவினையில், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மேற்கு வங்கத்திற்குக் குடிபெயர்ந்தனர். அப்போது பரவிய காலரா நோயால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து வீழ்ந்தனர். அவர்களைக் காத்த ஆபத்பாந்தவர் டாக்டர் திலீப் மஹாலனபிஸ். இவர் பிறந்தது 1934 ஆண்டு நவம்பர் 12 அன்று ஒன்றிணைந்த இந்தியாவிலிருந்த வங்காள மாகாணத்தின் கிஷோர்-கஞ்ச் மாவட்டத்தில். ஆரம்பப் பள்ளியை முடித்ததுமே கொல்கத்தாவுக்கு குடும்பம் குடிபெயர, அங்கேயே படிப்பைத் தொடர்ந்த திலீப் 1958-ம் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment