Published : 02 Feb 2023 06:16 AM
Last Updated : 02 Feb 2023 06:16 AM
பொதுவாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் நெஞ்செரிச்சல் மற்றும் உணவு எதுக்களித்தல் எனும் தொண்டையில் உணரப்படும் புளிப்பான அமிலச்சுவை ஆகியவற்றை கெர்ட் நோயின் முதல் அறிகுறிகள் எனலாம். அத்துடன் தொடர்ந்து வரும் வாந்தி, ஏப்பம், விக்கல், தொண்டை வலி, வறட்டு இருமல், குரல் கரகரப்பு, விழுங்குவதில் சிரமம் இவை அனைத்துக்கும் மேலாக, தூக்கமின்மையால் அவதி என நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் மற்றவையும்கூட இந்த கெர்ட் நோயின் மற்ற அறிகுறிகள்தான்.
அதிக உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியம் என வயது கூடியவர்களில் மட்டுமே இதுவரை காணப்பட்டு வந்தது கெர்ட் நோய். ஆனால், சமீபகாலமாக பதின்பருவத்தினரிடையேயும் குழந்தைகளிடையேயும் அதிகரித்து வருகிறது. மாறிவரும் நமது வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் இரைப்பை மற்றும் குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment