Published : 30 Nov 2022 06:20 AM
Last Updated : 30 Nov 2022 06:20 AM

ப்ரீமியம்
கையருகே கிரீடம் - 20: எதிர்காலத்தை அச்சடிக்கும் முப்பரிமாண அச்சு!

ஒரு சிற்பம் செதுக்கப்படுவதை போல மூலப்பொருளை கழிக்காமல், செங்கல் வரிசைகளால் சுவர் கட்டப்படுவதைப் போல ஒவ்வொரு அடுக்காக மூலப்பொருளை கூட்டி ஒரு பொருளை உருவாக்குவது முப்பரிமாண அச்சு (3D Printing) தொழில்நுட்பம். இது கூட்டல் உற்பத்தி (Additive Manufacturing) என்று பொறியியல் துறையில் அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமான புதிதில் புதிய மாதிரிகளை உருவாக்கப் பயன்பட்டது. அதனால் விரைவு மாதிரியாக்கம் (Rapid Prototyping) என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு.

முப்பரிமாண மாதிரி அடுக்கடுக்காகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடுக்காக அச்சடிக்கப்படும். இதற்கான மென்பொருள்களும் உண்டு. பயணிகள் மற்றும் போர்விமான பாகங்கள், விமான எஞ்சினின்பாகங்களை அலுமினியம், டைட்டானியம் மற்றும் நிக்கல் உலோகக் கலவைகளில் அச்சடித்து இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். பல ராணுவக் கருவிகள் உபகரணங்கள் உருவாக்கத்திலும் முப்பரிமாண அச்சு முக்கிய பங்காற்றுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x