Published : 15 Nov 2022 06:20 AM
Last Updated : 15 Nov 2022 06:20 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 17: இசை கேட்டு காந்தியடிகளிடம் இருந்து வந்த அழைப்பு!

ஒரு நல்ல பாடல் உங்கள் மெல்லிய உணர்வுகளைத் தொட்டு அசைக்கிறது. ஆனால், அதே பாடல் பாரதியோ, பாரதிதாசனோ, பட்டுக்கோட்டையோ எழுதும்போது அதில் நெருப்பு பற்றிக் கொள்கிறது. அப்படித்தான் வானொலியில் பாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர், மகாத்மாவின் அழைப்புக்குப் பின் மருத்துவராகி, பின்பு இந்திய வான்படையில் மகத்தான பங்காற்றியுள்ளார். அவர்தான் டாக்டர் விஜயலட்சுமி ரமணன்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நாராயணய்யர் மற்றும் அனந்தலட்சுமி தம்பதிக்கு, 1924-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம்தேதி பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்ததே ஒரு இசைக் குடும்பம். தாத்தா டி.ஏ.துரைசாமியின் பாடல்கள் என்றால் சுவாமி விவேகானந்தருக்கு அவ்வளவு பிரியமாம். தாத்தாவிவேகானந்தரின் இசை நண்பர் என்றால்,கொள்ளுப்பாட்டனார் அப்பு பாகவதரோ கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ பாகவதரின் முக்கிய சீடராகவும் திருவிதாங்கூர் அரசவையின் இசை வித்வானாகவும் விளங்கியவர். அதையும் தாண்டி இவரின் தந்தை நாராயணய்யர் மட்டும் இசையைத் தவிரவும் கல்வியையும் கற்று, மிகப்பெரிய வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x