Published : 20 Oct 2022 06:12 AM
Last Updated : 20 Oct 2022 06:12 AM

ப்ரீமியம்
ஊடக உலா - 14: டிரென்டிங் செய்திதான் நல்ல செய்தியா?

தங்க.ஜெய்சக்திவேல்

செய்திகளைப் பார்ப்பவர்களும், படிப்பவர்களும் இன்றைய சமூக ஊடக காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதால், அதை மக்களுக்கு கொண்டு செல்கிறவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை உற்றுநோக்குதல் நலம். ஊடகத்துறையில் சேர விரும்பும் இளையோர் இப்போதிலிருந்தே இந்த கண்ணோட்டத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும். முதன்மையான ஊடகங்கள் எல்லா செய்திகளையும் வெளியிடுவதில்லை. செய்திகளின் முக்கியத்துவத்தினைப் பொறுத்து அவை பதிப்பிக்கப்படுகின்றன.

ஆனால், இன்று இணையத்தின் அசுர வளர்ச்சியும், கைப்பேசிகளின் ஊடகப் பயன்பாடும் அதிகரித்து விட்டதால், அனைவராலும் ஒரு ஊடகமாகச் செயல்பட முடிகிறது. இவர்கள் உள்ளடக்க தயாரிப்பாளர் (Content Generator) எனப்படுகிறார்கள். ஒருகாலத்தில் நீங்கள் காணொளி வடிவில் ஒரு செய்தியை உருவாக்க வேண்டும் எனில், அதற்கு ஒரு நல்ல கேமரா, மைக், வெளியில் ஒலிக்கும் சப்தங்களை உள்வாங்காத ஸ்டுடியோ, விளக்குகள் என பலவும் தேவை. அந்த காணொளியை எடுத்து முடித்த பிறகு, அவற்றை எடிட் செய்ய ஒரு தரமான எடிட்டிங் மென்பொருள் தேவை, அதுவும் உயர் ரக மென்பொருள் கொண்ட கணினி மிக அவசியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x