Last Updated : 10 Oct, 2022 06:00 AM

 

Published : 10 Oct 2022 06:00 AM
Last Updated : 10 Oct 2022 06:00 AM

ப்ரீமியம்
உலகை மாற்றும் குழந்தைகள் 13: பள்ளி மாணவியின் #MeToo

ஆசிரியை அமுதா வகுப்புக்குள் நுழைந்தார். “என்னாச்சு, ஒருமாதிரி இருக்கீங்க?” ஆசிரியை கேட்டார். “ஒரு பையன், நம்ம அதிமதுரா முகத்துல வேணுமுன்னே தண்ணிய ஊத்திட்டான்” என்றாள் தூரிகா. “பையனோட வகுப்பு ஆசிரியர்ட்ட சொன்னீங்களா?.” “அப்படி சொல்லனும்னா, நிறைய பசங்களச் சொல்லலாம் டீச்சர்” என்றாள் தூரிகா. ஆசிரியை அமுதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு, ஒரு கதை சொன்னார்.

பொறுத்தது போதும்: தென் கொரியாவில் 1998-ல் பிறந்தார் யாங் ஜி-ஹே. “பெண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும்” என்கிற சமூகத்தின் எதிர்பார்ப்பை யாங்-கால் நிறைவேற்ற இயலவில்லை. பள்ளிக்குச் சென்றபோது, மாணவிகளை தனித்தனியாக தன் அறைக்கு வரச் சொன்ன ஆசிரியர் ஒருவர் அங்கிருந்தார். அறைக்குள் சென்றபோது, ஆசிரியரின் தொடுதலில் இருந்து தப்பிப்பதற்காக, கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் கனமான துணிகளாலும், புத்தகங்களாலும் மாணவிகள் மறைத்தார்கள். பள்ளி நிர்வாகத்துக்கு இது தெரிந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x