Published : 26 Sep 2022 06:20 AM
Last Updated : 26 Sep 2022 06:20 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 12: யாரெல்லாம் உறவினர் ஆவார்கள்?

அரிஅரேவலன்

நம்மை நாம் அறிந்து, பிறரோடு ஒத்துணரும்போது என்ன நிகழும் என்ற வினாவோடு வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில். வகுப்பில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. எல்லோருடனும் நன்கு பழகலாம் என்றான் அருளினியன் மெல்லிய குரலில். அப்படிப் பழகும்போது அவர்களோடு நமக்கு என்ன ஏற்படும் என்று வினவினார் ஆசிரியர் எழில். ம்… ம்… ம்… உறவு என்றான் அருளினியன் சிறிது சிந்தனைக்குப் பிறகு. அருமை. சரியாகச் சொன்னாய் என்று அவனைப் பாராட்டினார் எழில்.

உறவு என்றால் என்ன? - உறவு என்றால் என்ன என்று வினவினாள் பாத்திமா. மனிதர்களுக்கு இடையே நிலவும் தொடர்பு என்றான் காதர். அந்தத் தொடர்பு எதன் அடிப்படையில் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பினான் சாமுவேல். உணர்வின் அடிப்படையில் என்றாள் கயல்விழி. ஒருவர் மற்றவர்களோடு தொடர்பே இல்லாமல் வாழ முடியாதா என்று வினவி நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் முகில். யாரும் தனித்து வாழ முடியாது. வாழ்வதற்குத் தேவையான பலவற்றுக்கும் நாம் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டியதாக இருக்கிறது என்றாள் மணிமேகலை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x