Published : 29 Aug 2022 06:28 AM
Last Updated : 29 Aug 2022 06:28 AM
தேவா என்றொரு குட்டிப் பையன்.இரண்டாம் வகுப்பு படிக்கிறான். ரொம்ப சமர்த்தன். அப்பா, அம்மா தரும் தொல்லைகளை பொறுத்துக்கொண்டு இந்த உலகில் வாழும் அன்பு மனம் கொண்டவன். அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால் அதிகாலை 5.30 மணிக்கு தேவாவை எழுப்பி, தங்களுடனே தயாராகச் சொல்வார்கள். அன்று காலை அப்பா தேவாவை எழுப்புகிறார். தேவாவுக்கு சிறிது தூக்கம் வந்ததால், "ஐந்து நிமிடம் அப்பா" என்று கெஞ்சுகிறான்.
"தடிமாடே எத்தனை முறைடா எழுப்பு றது.. நானெல்லாம் உன் வயதில் ஐந்து மணிக்கே எழுந்து ஆற்றுக்கு குளிக்கச் செல்வேன்" என்கிறார். உடனே தேவா, "அப்பா என்னையும் கூட ஆத்துக்கு கூட்டிப்போங்களேன்" என்கிறான். திடீரென்று தேவாவுக்கு முந்தின இரவு ரோஜா மொட்டுவிட்டதை பார்த்த நினைவு வருகிறது. "அம்மா அம்மா.. ரோஜாப்பூ மொட்டு இருந்தது. பூத்திருக்கும் இல்லையா. சன்னல் கதவை திறங்க அம்மா. பார்க்க லாம்" என்கிறான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT