Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, ஏபிஜே அகாடமி சார்பில் மாணவர்களுக்கான - ‘கையெழுத்துப் பயிற்சி’; செப்.1-ல் தொடக்கம்: ஆன்லைனில் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது

கரோனா பரவல் காரணமாக வீடுகளிலேயே இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன்இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 8 நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘கையெழுத்துப் பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை 8 நாட்கள் நடத்துகிறது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 9-ம் தேதி வரை(5-ம் தேதி ஞாயிறு நீங்கலாக) தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை இப்பயிற்சி நடத்தப்படும்.

கடந்த 7 ஆண்டுகளாக மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக பல பயிற்சிகளை வழங்கிவரும் ஏபிஜே அகாடமியின் நிறுவனரும், புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான தேவகி பாலாஜி இந்த கையெழுத்துப் பயிற்சியை வழங்க உள்ளார். இவர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இப்பயிற்சியில் 7 வயது குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.

இதில் சேர்த்து எழுதுதல், நேர்த்தியாகவும், தெளிவாகவும் எழுத்துகளை எழுதும் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான உள்ளடக்கங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இதை பிரின்ட்-அவுட்எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் நாள்தோறும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி முடிவில் அனைவருக்கும் அழகான கையெழுத்து அமையும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/event/116-handwriting-course.html என்ற இணையதளத்தில் ரூ.750 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்றசெல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x