Published : 23 Aug 2022 06:55 AM
Last Updated : 23 Aug 2022 06:55 AM

10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

சென்னை: 10-ம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகளை 23-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் 25, 26-ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணத்தை (ஒரு பாடத்துக்கு ரூ.205) செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் முடிவு வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x