Published : 18 Jun 2024 06:15 AM
Last Updated : 18 Jun 2024 06:15 AM

ப்ரீமியம்
புதுமை புகுத்து - 21: கஞ்சனிடம் கறப்பது போல வாழும் செடி!

அபுதாபியின் நியூயார்க் பல்கலையில் பணிபுரியும் மேரி அல்-ஹண்டாவி ஒருநாள் காரில் சென்றபோது வழியில் சிவப்புக்கோடைச்சவுக்கு செடி கண்ணில் பட்டது. அதில் வெள்ளை வெள்ளையாக முத்துபோல உப்பு படிகங்கள். வியப்பாக உப்பு திரளை சுற்றி நீர் திவலைகள் திரண்டு இருந்தன. ஏதோ புதிய கண்டுபிடிப்பை நோக்கி செல்கிறோம் என்றது மேரியின் மனது.

மண் பானையில் சிறுசிறு துளைகள் இருக்கும். அந்த துளைகள் வழியே நீர் கசிந்து பானையின் வெப்பத்தை உறிஞ்சி அவை ஆவியாகிவிடும். பானை நீர் குளிர்ந்து விடும். அதுபோல நமது தோல் வியர்வையை சுரந்து ஆவியாகும்போது உடல் குளிர்கிறது.
ஆனால், சிவப்புச்சிறுசவுக்கு போன்ற உவர்வளரி தாவரங்கள் உப்பு கூடுதலாக இருக்கும் பாலை பகுதியில் வாழ்பவை. இந்த தாவரத்தின் வெளியே சிறு திரளாக முத்து போல உப்பு வெளிப்படும். செடியின் மேற்பரப்பில் உள்ள நீர் பசை ஆவியாகி, வெறும் உப்பு மட்டும் படிக வடிவில் படிந்து விடும். வீசும் காற்றில் இந்த உப்பு ஓரளவு அடித்து செல்லப்படும். இப்படி உப்பை வியர்வையைபோல இந்த செடி வெளியிடுவது குளிர்ச்சி அடைவதற்கல்ல. வேறெதற்கு?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x