Published : 29 Sep 2013 06:01 PM
Last Updated : 29 Sep 2013 06:01 PM

ஆசிய துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் ஸ்வரன் சிங் சாம்பியன்

சீனாவில் நடந்த 15-வது ஆசிய துடுப்புப் படகு போட்டியில், இந்தியாவின் ஸ்வரன் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார்.



லுவானில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இந்தத் தொடரில், இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்தது.

ஒலிம்பிக்கில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தவரான ஸ்வரன் சிங் தன் இறுதிச் சுற்றில், 6:12.47 நிமிடங்களில் இலக்கை எட்டி, ஈரான் மற்றும் சீனா வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தங்கம் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x