Published : 19 Apr 2023 11:28 PM
Last Updated : 19 Apr 2023 11:28 PM

ரூ.10 கோடியில் புதிய காட்சிமுனைகள்; சென்னையில் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு: சுற்றுலாத்துறையின் புதிய அறிவிப்புகள்

கங்கைகொண்ட சோழபுரம் | கோப்புப்படம்

சென்னை: "யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்" என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ரூ.4 கோடியில் சுற்றுலா வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

  • மதுரையில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு அலகு-2 இல் கூடுதல் விருந்து மண்டபங்கள் ரூ.7 கோடியில் கட்டப்படும்.
  • ராமேஸ்வரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் ரூ.7 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
  • உதகமண்டலம் ஏரி பகுதியில் பார்வையாளர் மாடம், நடைபாதைகள், இருக்கைகள், மின்விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • திருப்பதி மற்றும் பிற சுற்றுத்தலங்களுக்காக 2 குளிர்சாதன VOLVO பேருந்துகள் ரூ.2.8 கோடியில் வாங்கப்படும்.
  • ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் 3D Projection Mapping தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்த ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும்.
  • சுற்றுலாத்தலங்களில் இயற்கை அழகை ரசிக்க ரூ.10 கோடியில் புதிய காட்சி முனைகள் ஏற்படுத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்த சென்னையில் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் ரூ.3 கோடியில் சுற்றுலா வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
  • ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள படகு இல்லங்களில் ரூ.15 லட்சத்தில் மிதவை உணவகங்கள் உருவாக்க சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப்பகுதி சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.5 கோடியில் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்.
முதல்வரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்
  • ஏற்காடு சுற்றுலாத்தளம் நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உள்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளுடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரான தரங்கம்பாடி, பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • உதகமண்டலம் ஏரி பகுதியில் பார்வையாளர்கள் மாடம், நடைபாதைகள், இருக்கைகள், மின்விளக்குகள் போன்ற வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • மாமல்லபுரம் கடற்கரை ஓய்வு வளாகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அதிநவீன மாநாட்டு அரங்கம் (Convention Centre) கட்டப்படும்.
  • நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதி ரூ.3 கோடியில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்.
  • கன்னியாகுமரியை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த ரூ.1 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
  • தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறையுடன் இணைந்து வழிகாட்டிச் சுற்றுலாக்கள் நடத்தப்படும்.
  • சென்னை ஹுமாயுன் மகால் பாரம்பரிய கட்டடம் அமைப்பதற்கு ரூ.50 லட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x