Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் :

மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

2019-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகளை வெளியிட்டபோது, முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்வில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரித்தால் மட்டுமே அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும் என கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு, குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. சிபிஐ நேர்மையாகவும், விரைவாகவும் வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x