Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில்மதுரை வந்த பயணிக்கு கரோனா :

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில்மதுரை வந்த ஒரு பயணிக்குகரோனா உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து 151 பயணிகள் விமானத்தில் நேற்று மதுரை வந்தனர். இவர்களை சுகாதாரத் துறையினர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தனர். இதில், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருடன் வந்த மனைவி, மகனுக்கும் பரிசோதனை செய்தனர். இருவருக்கும் கரோனாதொற்று இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ஒமைக்ரான்பாதிப்பு உள்ளதா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. விமானத்தில்வந்த மற்ற அனைத்து பயணிகளையும் 15 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பயணிகள் பொது இடங்களுக்குச் செல்வதை கண்காணிக்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x