Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
கல்லூரி மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடுவதால், கல்லூரிகளில் நடப்பு தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில் நேரடித் தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே மாணவர் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT