Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

திண்டுக்கல்லில் - திமுக வேட்பாளர்களுக்கு வரவேற்பு :

திண்டுக்கல்லில் உள்ள திமுக அலுவலகத்தில் தலைவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்ட வேட்பாளர்கள்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதி களில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு நேற்று கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி(ஆத்தூர்), திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கர பாணி(ஒட்டன்சத்திரம்), கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார்(பழநி), மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஆண்டிஅம்பலம்(நத்தம்), தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.காந்திராஜன்(வேடசந்தூர்) ஆகியோர் போட்டியிடுவதாக கட்சித்தலைமை நேற்றுமுன்தினம் அறிவித்தது.

இதையடுத்து நேற்று காலை அனைவரும் திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இவர்களுக்கு திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தை தொடங்கினர். திமுக வேட்பாளர்கள் திங்கட்கிழமை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x