Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM

பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் :

திருநெல்வேலி வண்ணார்பேட்டை யில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை யில் பகவத்கீதை பாராயணம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கிருஷ்ண பலராமர் மோட்ச ஏகாதசி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுவாமி சந்நிதிமுன் பகவத்கீதைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக ரூ.400 மதிப்பு ள்ள பகவத் கீதை புத்தகம் ரூ.225-க்கு வழங்கப்பட்டது. அத்துடன் யோகா சம்பந்தமான 6 விளக்க புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த சிறப்பு சலுகை விற்பனை தொடர்ந்து சில நாட்கள் நடைபெறும் என்று, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் களுக்கு ஏகாதசி அனுகல்ப பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x