விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு.
விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு.

விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் : போலீஸாருடன் தள்ளுமுள்ளு

Published on

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறையில் விவசாயிகள் இறந்தது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வனமுறை தொடர்பாக மத்திய இணை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வர் ஆகியோர் பதவி விலகக்கோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் விருதுநகரில் போராட்டம் நடந்தது. பழைய பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் லிங்கம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரிக்க முயன்றவர்களை போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in