Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு :

தேனி அல்லிநகரம் வடக்கு மச்சால் தெரு பாலகிருஷ்ணன் மனைவி கங்கா(43). வீட்டில் துணிகளை துவைத்தவர் ஈரக்கையுடன் மோட்டார் சுவிட்ச் பிளக்கை கழற்றியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். மயங்கிக் கிடந்தவரை அருகிலிருந்தோர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயேஅவர் இறந்து விட்டார். அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராணி விசாரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x