Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM
வெள்ளகோவில்: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.43 லட்சத்துக்கு தேங்காயும், ரூ. ஒரு லட்சத்துக்கு கொப்பரையும் ஏலம் போனது.
இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ரங்கன் கூறும்போது, ‘‘வெள்ளகோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 55 விவசாயிகள் பங்கேற்று, 15,296 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
முதல் தரம் ஒரு கிலோ ரூ.29.30-க்கும், 2-ம் தரம் ரூ.23.65-க்கும், சராசரியாக ரூ.28.30-க்கும் ஏலம் போனது. 4 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல கொப்பரை ஏலத்துக்கு 1,121 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.76.10-க்கும் ஏலம் போனது. 1,121 கிலோ கொப்பரை ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதில், 47 விவசாயிகள் பங்கேற்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT