Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதை முன்னிட்டு, `அம்ரித் மகோத்ஸவம்' என்றபெயரில் மத்திய அரசு கொண்டாட்டங்களை நடத்திவருகிறது.
இதன் ஒரு பகுதியாகவும், மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையிலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.
வருமான வரித் துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் பி.வி.கோபிநாத், எக்ஸ்னோரா அமைப்பு நிறுவனர் டாக்டர் எம்.பி.நிர்மல் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
இதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகங்கள், அதிகாரிகள், ஊழியர்கள் குடியிருப்பு வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில், வருமான வரித் துறை மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT