Published : 11 Dec 2021 03:09 AM
Last Updated : 11 Dec 2021 03:09 AM

பேருந்தில் கஞ்சா கடத்தியதாக : முன்னாள் ஊர்காவல் படை வீரர் கைது :

பொள்ளாச்சி: கோமங்கலம்புதூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் சுல்தான் இப்ராஹீம், சந்திரசேகரன் ஆகியோர் பொள்ளாச்சி உடுமலை சாலையில் அந்தியூர் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழநியிலிருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தியதில், பொள்ளாச்சி அடுத்த செடிமுத்தூரை சேர்ந்த முன்னாள் ஊர்காவல் படை வீரரான மூர்த்தி (32), கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x