Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM

நல்லமுடி காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை :

வால்பாறையில் உள்ள முடீஸ் குரூப் எஸ்டேட் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கடந்த ஒருவார காலமாக முகாமிட்டுள்ளன. நல்ல முடி எஸ்டேட்,முத்துமுடி எஸ்டேட் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் நல்லமுடி காட்சி முனைப் பகுதிகளிலும் யானைகள் நடமாடி வருகின்றன. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் கணேசன் உத்தரவுப்படி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, யானைகள் நடமாடும் நல்லமுடி காட்சி முனை, நல்லமுடி, முத்து முடி எஸ்டேட் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x