Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

அலுவலக உதவியாளர் பணிக்கு டிச.22-க்குள் விண்ணப்பிக்கலாம் :

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) ஆகியோருக்கு அதிகபட்ச வயது 37. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோருக்கு 34 வயது. இதர வகுப்பினருக்கு 32 வயது.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம், கல்வித் தகுதி சான்றுகள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வேலை வாய்ப்பக பதிவு விவரம் ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பதாரரின் சுய முகவரி எழுதப்பட்ட ரூ.25-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ டிச.22-ம் தேதி மாலை 5.45 மணிக்குள், மயிலாடுதுறை ஆட்சியருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

இதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆட்சியர் ரா.லலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x