Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

சென்னைக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பி வைப்பு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இதேபோல, நாமக்கல்லில் கொள்முதல் செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் முட்டைகள் மன்னார்குடிக்கு கொண்டுவரப்பட்டு, நேற்று முன்தினம் காலை ஜோத்பூர் சென்ற பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஜோத்பூருக்கு 2-வது முறையாக அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் மன்னார்குடி ரயில் நிலையம் வழியாக ரயில்வே துறைக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x