Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

அரசு பேருந்து : மோதி இளைஞர் உயிரிழப்பு :

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரி ழந்தார்.

மதுரை மாவட்டம், பனை யூரைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (29). இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் மானாமதுரைக்குச் சென்றார். திருப்புவனத்தை அடுத்த மணலூர் அருகே சென்றபோது, பின்னால் வந்த மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனிக்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x