Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது :

கோவில்பட்டி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் காந்தி, கனகசுந்தரம் ஆகியோர் தலைமையில் போலீஸார் கடலையூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் திடீரென அவற்றை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

போலீஸார் துரத்திச் சென்று அவர்களை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சிவஞானம் (19) மற்றும் 15 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. கோவில்பட்டி ஜோதி நகர் 2-வது தெரு மற்றும் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களையும் திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x