Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM

குடிநீர் வழங்க கோரி மக்கள் மறியல் :

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கடைக்கோடி ஊராட்சியாக உள்ள செல்லப்பம்பாளையத்தில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், செல்லப்பம்பாளையம்- பொள்ளாச்சி இணைப்புச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி,குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் பேசி இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x