Published : 20 Nov 2021 03:07 AM
Last Updated : 20 Nov 2021 03:07 AM

வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் : ‘வால்வோ தமிழ்நாடு’ ஷோரூம் கோவையில் திறப்பு :

கோவை: சுவீடன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ‘வால்வோ கார் இந்தியா’ நிறுவனம் தனது புதிய ‘வால்வோ தமிழ்நாடு’ என்னும் ஷோரூமை கோவை அவிநாசி சாலையில் திறந்துள்ளது. தமிழகத்தில் திறக்கப்படும் இரண்டாவது ஷோரூம் இதுவாகும். இந்த புதிய அதிநவீன ஷோரூம் தனித்துவமிக்க ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனைப் பிரிவு 7 ஆயிரம் சதுர அடியிலும், கார்களுக்கான பராமரிப்பு சேவை மையம் 13 ஆயிரம் சதுர அடியிலும் திறக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஷோரூமை வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா திறந்து வைத்து பேசும்போது,‘‘ தமிழகம் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும், கோவை வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். தற்போது நாங்கள் கோவையில் திறந்துள்ள இந்த ஷோரூம் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஆடம்பர கார்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான சொகுசு கார்களை வழங்கி எங்கள் இலக்கை அடைவதற்கும் மிகுந்த உதவியாக இருக்கும்’’ என்றார்.

வால்வோ தமிழ்நாடு ஷோரூம் இயக்குநர் விஷ்ணு கூறும்போது,‘‘தமிழகத்திலுள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான கார்களை வழங்குவதற்காக வால்வோ கார் இந்தியாவுடன் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்றார். இந்த ஷோரூமில், செடான் எஸ்.90, நடுத்தர சொகுசு எஸ்யூவி காரரான எக்ஸ்.சி.60 மற்றும் எஸ்யூவி சொகுசு காரரான புதிய வால்வோ எக்ஸ்.சி.90 ஆகிய கார்களை விற்பனை செய்கிறது. இந்த 3 மாடல் கார்களும் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக இந்த ஷோரூமில் இடம் பெற்றிருக்கும்.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x