Published : 14 Nov 2021 03:07 AM
Last Updated : 14 Nov 2021 03:07 AM

கழுத்து வலியால் அவதியுற்ற ரயில்வே ஊழியருக்கு கோட்ட மேலாளர் உதவி :

மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிபவர் பானு. அவர் கழுத்து வலியால் கழுத்துப் பட்டை அணிந்துள்ளார்.

இவர் பணி நிமித்தமாக கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை சந்திக்கச் சென்றார். அவரைப் பார்த்த ரயில்வே மேலாளர், அவரது சிரமத்தை புரிந்து, முதல் மாடியில் உள்ள அவரது அலுவலக இருப்பிடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் அவரது அலுவலகத்துக்குச் சென்று கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு நடத்தினார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கும், கணினிக்கும் இருந்த உயர வித்தியாசமே கழுத்து வலிக்கு காரணம் எனக் கண்டறிந்தார். இதையடுத்து அலுவலகக் கண் காணிப்பாளருக்கு புதிய இருக்கை வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x